Monday, October 21, 2013

திருநங்கை

கடமையில் தவறு
கடவுளும் புரிவான்
- திருநங்கை 

Tuesday, October 8, 2013

மழை

மாலை வேளையில்
மண்வாசனை வீச
கண்ணிமைக்கும் நேரத்தில்
கருமேகங்கள் சூழ
வேகமாய் நானும்
வீதியில் இறங்கினேன்
மழையில்  என்னை
மறந்து நனைய !!!!!

Saturday, September 28, 2013

இறக்கையில்லா தேவதை

முதன்முதலாய் பார்த்த போதே
மெய்மறந்து போனேன்
உன் பார்வை பட்டவுடன்
உயிர்த்தெழுந்து வந்தேன்
உன் நிழலைத் தீண்டையிலே
உடல் சிலிர்த்து நின்றேன்
இறக்கையில்லா தேவதையை
இன்று நானும் கண்டேன் ......

நிலவின் மேல் காதல்

மேகத்தினுள் மறையும்
முழு நிலவே
ஆண்மகன் கண்பட
அரும்பியது நாணமோ
காக்கும் மேகங்களிடம்
காதலன் நானென்று
சொல்வாயோ வெண்மதியே !!!

Wednesday, September 18, 2013

அதரத்தின் தடம்

கரைதனை முத்தமிடும்
கடல் அலையே
நுரைதனை நிலத்தில்
நீக்கிச் சென்றாயே
அதரத்தின் தடமென்று
அனைவரும் அறியவோ !!!!!

Thursday, September 12, 2013

குரு தட்சணை

வியாபாரமாய் மாறிய
வழிகாட்டும் அறப்பணியில்
தன்னலம் பாராது
பிறர்நலம் பேண
எளியோர்களின் வாழ்வில்
ஏணிப்படிகளாய் விளங்கும்
ஆசிரியர்தம் பொற்பாதங்களை
அடிபணிவோம் நாமே !!!

இலவசம்

உருவானது உதவிக்கரமாய்
உருமாறியது அரசியலாய்
- இலவசம் 

Friday, July 19, 2013

தோழியும் அன்னையே...!!!

தனிமையில் நாமும் தனியாய் தவிக்க 
இனிமையை வந்து இதமாய் பேசி 
தூரத்தில் இருந்தாலும் தோள் கொடுத்து 
பாரத்தை இறக்க பாசம் காட்டும் 
தோழியும் இன்னோர் அன்னையே...!!!

Sunday, May 12, 2013

தந்தையாய் பிறந்தேன்

ஈருயிர் கலந்து ஓருயிர் மலர
பத்துத் திங்கள் யுகமென கழிய
பூக்களின் வண்ணம் கொண்டு
வந்தாயே எங்களிடம் வரமாய்
பூவுலகிலே கால்பதித்த உன்னுடன்
நானும் பிறந்தேனே தந்தையாய்....!!!!